education

img

ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வின் தேதி அறிவிப்பு... 

சென்னை 
மாநிலத்தின் முதன்மையான அரசு பணியாளர் தேர்வான குரூப் 1 தேர்வு மிக முக்கியமான பணிகளை கொண்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் துணை ஆட்சியர், வட்டாச்சியர், கோட்டாட்சியர், தாசில்தார், ஆர்டிஒ, டிஎஸ்பி போன்ற பணிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

நடப்பாண்டுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு (69 கலிப்பாணியிடம்) ஏப்ரல் 5-ஆம் தேதி (2020) நடைபெறவிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு ஏற்கனவே பதிவு செய்து காத்திருக்கும் தேர்வாளர்கள் கடும் குழப்பத்துடன் தொடர்ந்து படித்து வரும் நிலையில், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட புதிய அறிவிப்பில் வரும் ஜனவரி 3-ஆம் தேதி (2021) குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல ஒத்திவைக்கப்பட்டிருந்த தொழில்வளர்ச்சி இயக்குனர்கள் தொடர்பான காலிப்பணியிடங்கள் (12) வரும் ஜனவரி 9,10 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக இளசுகள் அதிகம் எதிர்பார்க்கும் குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு தொடர்பாக எவ்வித தகவலும் இல்லை.